செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழில் சுகாதார சீர்கேடான உணவகங்கள் தண்டத்துடன் சீல்!

யாழில் சுகாதார சீர்கேடான உணவகங்கள் தண்டத்துடன் சீல்!

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு  உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம்  தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தினை சீரமைக்கும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுசுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்கள் இனம் காணப்பட்டதை அடுத்து அதன் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளை அடுத்து ஒரு உணவகத்திற்கு 80 ஆயிரம் ரூபாயும், மற்றைய உணவகத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் நீதிமன்றம் தண்டம் விதித்தது. அத்துடன் உணவகத்தின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறும் மன்று கட்டளையிட்டது.

அதேவேளை காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பலசரக்கு கடை உரிமையாளருக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்து , அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் நீதிமன்று தண்டம் விதித்தது.

Latest articles

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது...

டெல்லியில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு…..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில்...

More like this

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது...

டெல்லியில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு...