மே முதலாம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினக் கூட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 350 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், தேவைப்பட்டால் இராணுவம் வரவழைக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.