செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமே தினத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு .......

மே தினத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு …….

Published on

spot_img
spot_img

உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் மே தின மேடையில் ஏறவுள்ளதாக ஐ.தே.க தெரிவித்தது.

வருட இறுதிக்குள் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளமையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளை கடந்த வாரத்தில் சந்தித்திருந்த ஜனாதிபதி உத்தேச தேர்தல் மற்றும் அரசியல் கூட்டணி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் பஷில் ராஜபக்ஷ, பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் டிரான் அலஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் இதன்போது முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இதனை மையப்படுத்தியே ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்க ஏனைய கட்சிகளுக்கு முதல் கட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் புதன்கிழமை (மே 01) 2 மணிக்கு கொழும்பு – மருதானை பகுதியில் இடம்பெறவுள்ளது.

சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஐ.தே.க.,வின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

Latest articles

திருகோணமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…..

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல. 38இல் உள்ள, பெரியகுளம் – விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று...

மூடப்படவுள்ள மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்….

வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி...

மருதங்கேணியில் மூன்று பிள்ளைகளின் தாயார் படுகொலை…..

மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணின் சடலம் அவர்...

குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி……

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற...

More like this

திருகோணமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…..

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல. 38இல் உள்ள, பெரியகுளம் – விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று...

மூடப்படவுள்ள மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்….

வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி...

மருதங்கேணியில் மூன்று பிள்ளைகளின் தாயார் படுகொலை…..

மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணின் சடலம் அவர்...