செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி.

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி.

Published on

spot_img
spot_img

லக்னோ, லக்னோவில் இன்று நடைபெற்ற 19வது கிரிக்கெட் லீக் உலகக் கோப்பை போட்டியில், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் நெதர்லாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விக்ரம்ஜித் சிங் (4), மேக்ஸ் ஓடவுட் (16), அக்கர்மேன் (29), டி லீட் (6), நிதாமனுரு (9), கேப்டன் எட்வர்ட்ஸ் (16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு, சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் இருவரும் இணைந்து அணியை ஆட்டமிழக்காமல் காப்பாற்றினர். இருவரும் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் கடந்தனர். இதனால் நெதர்லாந்து அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
ஏங்கல்பிரெக்ட் 70 புள்ளிகளையும், வான் பீக் 59 புள்ளிகளையும் பெற்றனர். இறுதியில் நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின், 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். குசல் பெரேரா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் குசல் மெண்டிஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் நிஷங்கவும், சமரவிக்ரமவும் அமைதியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிஷங்க அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், அசலங்க 44 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 30 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட சமரவிக்ரம 91 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது. நெதர்லாந்து அணி சார்பில் ஆர்யன் தத் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

More like this

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...