முதலை கடித்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
காலாந்தனைப் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நபர் ஒருவரே முதலை கடித்து உயிரிழந்துள்ளார்.
பொன்டுகள்சேனை நீரோடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, முதலை கடித்து நீருக்குள் இழுத்துச் சென்றதினால் அந்நபர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.