இன்று நடைபெறவிருந்த சம்பள உயர்வு பேச்சுவார்தைக்கு முதலாளிமார் சம்மேளத்தின் நிறைவேற்று அதிகாரிகள் எவரும் கலந்துக்கொள்ள வில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கொழும்பில் இன்று (24) புதன்கிழமை காலை சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு பெருந்தோட்ட கம்பனி அதிகாரிகள் வருகை தரவில்லை என்பதால் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தொழிற்சங்க சார்பில் கலந்து கொள்ளும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
இன்றைய தினம் இடம்பெறவிருந்த சம்பள பேச்சுவார்த்தை சம்பந்தமாக அவரிடம் வினவியப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.