மின்னல் தாக்கியதில் 23 வயதான இளைஞன் ஒருவரும் 12 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (29) இரவு மாத்தளை, இரத்தோட்டை, வெல்ஹாலயாய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு சடலங்களும் இரத்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.