மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரண்டு கடற்படை ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரண்டு ஹெலிக்கொப்டர்களும் தரையில் விழுந்து நொருங்குவதற்கு முன் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக உள்ளூர் ஊடக நிகழ்ச்சிகளில் வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் மலேசியாவின் லுமுட் நகரிலுள்ள கடற்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது. இரு கெலிக்கொப்டர்களிலும் பயணித்த எவரும் உயிர்ப்பிழைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.