மரண வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் வெள்ளிக்கிழமை (29) மரண வீடொன்றில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளின்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். அதனையடுத்து, அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.