நாய்கள் :- நாய்களால் ஒரு மனிதனின் மரணத்தை முன்கூட்டியே உணர முடியும். உங்கள் வீட்டில் நாய்களை வளர்த்து வரும் போது, வீட்டில் இருப்போருக்கு மரணம் நெருங்கினால் வீட்டில் இருக்கும் நாய் அழத் தொடங்கும். எனவே தான் வீட்டில் உள்ள நாய் அழுதால் வீட்டிற்கு நல்லதல்ல என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
பூனைகள் :- நாய்க்கு அடுத்தப்படியாக வீட்டில் வளர்க்கும் மற்றொரு செல்லப் பிராணி தான் பூனை. பழங்காலத்தில் இருந்தே பூனைகள் மரணத்தை முன்னறிவிப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதுவும் ஜோதிடத்தின் படி, ஒரு வீட்டில் 2 பூனைகள் சண்டை போடுவது நல்லதல்ல. அப்படி போட்டால், அது அந்த வீட்டில் மரணம் நிகழப் போகிறது என்று அர்த்தம் என கூறப்படுகிறது.
கருப்பு நிற பட்டாம்பூச்சி :- பலவண்ண பட்டாம்பூச்சிகள் மங்களகரமானவை. ஆனால் கருப்பு நிற பட்டாம்பூச்சி மரணத்தின் தூதர் என்று கூறுப்படுகிறது. சொல்லப்போனால் கருப்பு நிற பட்டாம்பூச்சியை அந்துப்பூச்சி என்றும் அழைப்பர். இந்த கருப்பு நிற பட்டாம்பூச்சி இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தால், அது அபசகுனமாக கருதப்படுகிறது.