இந்தியாவின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பாரிமுனை திரும்பும் வீதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே ஒரு கூட்டம் கூடியிருந்தனர். இருவர் அவ் வீதியூடாக பயணித்த தருணத்தில் கூட்டத்தை பார்த்து விட்டு நிறுத்தி அவ்விடத்தை நோக்கி சென்ற தருணத்தில் 50 _ 60 வயது மதிக்க தக்க முதியவர் கழிவு நீர் மிதந்து கிடந்திருக்கிறார். ஆனால் சேற்று நீர் என்பதால் அதில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற தயங்கிய நிலையில் இந்த வீதியால் சென்ற அந்த நபர் உடனடியாக அந்த கால்வாய்க்குள் இறங்கி அந்த முதியவரை காப்பாற்றி உடனே அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவரோடு தீயணைப்பு வீரரும் பூரண ஒத்துழைப்பு வழங்கி ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறார்கள். இச் செயலை பல்வேறு பட்டவர்களும் பாராட்டி வருகின்றனர்.