பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் எதிர்வரும் 25ஆம் திகதி தகுதிகாண் சுற்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த தகுதிகாண் சுற்றில் 10 நாடுகள் இரண்டு குழுக்களில் விளையாடவுள்ளதுடன் இலங்கை மகளிர் அணியும் தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
மகளிர் ரி 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஸ்கொட்லாந்து, தாய்லாந்து, உகண்டா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.
பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, வனாட்டு, ஸிம்பாப்வே ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
லீக் சுற்று முடிவில் இந்த இரண்டு குழுக்களிலும் முதல் இடத்தைப் பெறும் இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண பிரதான சுற்றில் பங்பற்ற தகுதிபெறும்.
இந்த பத்து அணிகளும் தகுதிகாண் சுற்று ஆரம்பமாவதற்கு முன்னர் இன்று ஞாயிற்றுக்கிழமையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளன.