பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர்களை, புதிய வகை மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அவர்களை தாக்குவதற்கு விசேட பயிற்சி பெற்ற குழுவொன்று அடுத்த வாரம் முதல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார் .
இந்த குழுக்கள் போதைபொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் களமிறக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு பொலிஸ் சீருடைக்கு நிகரான விசேட சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற இந்த குழுவிற்கு 100 புதிய வகை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் பிரிவுடன் இணைந்து குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.