ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
மத்துமகல ராகம பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இவரை சுட முயன்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது .
இந்நிலையில், அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.