செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபெருந்தோட்டப்புற பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம்.....

பெருந்தோட்டப்புற பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம்…..

Published on

spot_img
spot_img

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதத்திற்குள், குறித்த பதவி வெற்றிடத்திற்காக ஆட்சேர்ப்பு செய்து, அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகளை வழங்கிய பின், பாடசாலைகளுக்கு அனுப்ப எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் இன்னமும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கல்வியற் கல்லூரிகளிலும் தகுதி பெறும் மாணவர்கள் மிகக்குறைவு எனவும், பட்டதாரிகள் ஒரு சிலரே இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு தீர்வாக தற்போது ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் படி, தகைமையுடைய ஐநூறு ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சுக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், மூன்று வருடங்களுக்குள் ஆசிரியர் மையங்கள் ஊடாக டிப்ளோமா மட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நிலையான தீர்வுகளை வழங்குவது சவாலாக இருக்கும் போது, ​​மாற்றுத் தீர்வுகள் மூலம் கல்வி முறையைத் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Latest articles

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை……

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் 30 வயதுடைய நபர் ஒருவர்...

நிதி அமைச்சின் செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…..

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும்...

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளுக்கு முன்னாள் ஜனாதிபதி விளக்கம்……

தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

குஜராத் அணியை நொருக்கி தள்ளிய பெங்களூர் அணி …….

17வது இந்தியன் பிறீமியர லீக் தொடரின் 45வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது. போட்டியில் குஜராத் மற்றும்...

More like this

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை……

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் 30 வயதுடைய நபர் ஒருவர்...

நிதி அமைச்சின் செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…..

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும்...

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளுக்கு முன்னாள் ஜனாதிபதி விளக்கம்……

தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...