சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலும் , நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையிலும் இந்தியாவில் இருந்து நான்கு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் விவசாய அமைச்சில் முட்டை விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அரச வர்த்தக பல்வேறு சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 12 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும், அதில் ஒன்றரை மில்லியன் முட்டைகள் தினமும் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்படும் எனவும் அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் நுகர்வோருக்கு 04 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை லங்கா சதொச கிளைகளில் தடையின்றி கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.