பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடி சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கலால் திணைக்களத்தின் ஆணையாளர் சன்ன வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தச் சம்பவம் தொடர்பில் கலால் ஆணையாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவர் குற்றம் செய்துள்ளதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.