பிரித்தானிய செல்ல வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சான்றிதழ் தொடர்பில் பலரும் தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே நீங்கள் பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதி அதற்கான புள்ளிகளை பெறவில்லை எனில் உங்களுக்கான சான்றிதழ் உறுதி ஆகாது. போலியான நபர்கள் இது தொடர்பான பொய்யான சான்றிதழ் பெற்று உங்களுக்கு தருவதாக கூறினால் நம்ப வேண்டாம். போலியான சான்றிதழுடன் பிரித்தானிய பிரவேசிக்கும் பட்சத்தில் 10 வருடங்கள் தடை விதிக்கப்படும். அதன் பின்னர் பிரித்தானிய வரும் முயற்சி கடினமாக இருக்கும் எனவே இது தொடர்பாக இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.