கம்பஹா பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகரான “ஒஸ்மன்” என்பவரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வான்றில் வைத்து சுட்டுக் கொலை செய்யத் திட்டமிட்ட இருவர் துப்பாக்கிகளுடன் பேலியகொடை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெவெல்தெனிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள “கெஹல்பத்தர பத்மே” மற்றும் அவரது சகாவான “அவிஷ்க” ஆகியோரின் தலைமையில் இந்த கொலையானது திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரொன்று கம்பஹா தனியார் வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.