மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் பழங்களில் அடங்கியுள்ளன. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் தங்களின் தினசரி உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பப்பாளி- பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோப்பைன் போன்ற நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் தான் செரிமானத்தை மேம்படுத்துகின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன.
தர்பூசணி – இரவு நீண்ட நேரம் எதையும் சாப்பிடாமல், காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணியை உட்கொள்ளும் போது, அது வறண்டு போன உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை வழங்கும். மேலும் தர்பூசணியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது இதயம் மற்றும் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.
ஆப்பிள்- தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறுவார்கள். அது உண்மை தான். அதுவும் ஆப்பிளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது இன்னமும் நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்னும் ஒரு வகையான நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, பசியுணர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு இதில் க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது மூளையின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.