சுகாதாரத் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தமது தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை கைவிட தீர்மானித்துள்ள நிலையில் வருகின்ற திங்கட்கிழமை (19) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்களின் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.