பாடசாலைகளுக்கு இடையிலான Division 1 பிரிவின் உதைப்பந்து சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியான வெற்றியை உரித்தாக்கியது ஏறாவூர் அலிகார்.
இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு இடையில் வருடாந்தம் நடாத்தப்படும் 20 வயது பிரிவின் கீழான division 1 உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில்,
நாடளாவிய ரீதியாக திறமையை வெளிப்படுத்திய 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு,
கடந்த இரு மாத காலமாக நாட்டின் பல பாகங்களிலும் நடாத்தப்பட்டு வந்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டியின் இறுதிப்போட்டி இன்று கொழும்பு சுகததாச அரங்கிலே இடம் பெற்றது.
இதில் வடக்குக் கிழக்கிலே உதைப்பந்தின் ஜாம்பவானாக குறைவான வளங்களை கொண்டு நிறைவான திறமையை வெளிப்படுத்தி நிற்கும் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியும்,
போட்டி தொடரில் மிகத் திறமையாக விளையாடி இதுவரை தோல்வியை தழுவாத மேல் மாகாணத்தின் ஜாம்பவான் கொழும்பு சாஹிரா கல்லூரி அணியும்,
இறுதிப் போட்டியிலே மிகுந்த பலப்பரிட்சை நடத்தியது இதில் 5:4 என்ற கோல் கணக்கில் கொழும்பு சாஹிரா கல்லூரியை,
அலிகார் தேசிய பாடசாலை அணி வெற்றி கொண்டு சாதனை நிலைநாட்டி division 1 Champion பட்டத்தை வெற்றி கொண்டுள்ளது.