கடந்த 23ஆம் திகதி இரவு தம்புள்ளைக்கு வந்த மூன்று காட்டு யானைகள் நேற்று (24) அதிகாலை வீடுகள் மற்றும் கடைகளுக்கு அருகில் சுற்றி திரிந்ததை அடுத்து வனவிலங்கு அதிகாரிகள், தம்புள்ளை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் காட்டு யானைகளை கிரலாவ, மாரகெல்ல வனப்பகுதிக்கு விரட்டியதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.