கிளிநொச்சி , முழங்காவில் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் கடலில் தன்னை தானே சுட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.
சிரிபுர பகுதியை சேர்ந்த பிரேமரத்தின எனும் கடற்படை சிப்பாயே தனது உயிரை மாய்த்துள்ளார்.
கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படையின் படகில் பாதுகாப்பு அறையில் இருந்த துப்பாக்கியை எடுத்தே , தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகளும் , முழங்காவில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.