செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசிறுவனின் உயிரை பறித்த ஊஞ்சல் கயிறு.....

சிறுவனின் உயிரை பறித்த ஊஞ்சல் கயிறு…..

Published on

spot_img
spot_img

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஊஞ்சல் கயிறானது சிறுவனின் கழுத்தில் இறுகியதாகவும், அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் யாரும் இல்லாததால் சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் ஜனாஸாவை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார்.விசாரணைகளின் பின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Latest articles

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து விபத்தில் 36 பேர் உயிரிழப்பு…..

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். தென் சீனாவில் மொய்சூ நகர்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்….

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 692,446 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி,24 கரட்...

இரண்டரை மாத குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு….

கற்பிட்டி , கந்தகுடாவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று அதிகாலை இரண்டரை மாத...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு…..

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று...

More like this

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து விபத்தில் 36 பேர் உயிரிழப்பு…..

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். தென் சீனாவில் மொய்சூ நகர்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்….

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 692,446 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி,24 கரட்...

இரண்டரை மாத குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு….

கற்பிட்டி , கந்தகுடாவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று அதிகாலை இரண்டரை மாத...