நாளொன்றுக்கு சுமாராக எட்டு கிளாஸ் அளவு தண்ணீர் அல்லது குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகங்கள் தொடர்பான நோய்களை வரவிடாமல் கட்டுபடுத்துகின்றது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும். இந்த பாதிப்பின் விளைவாக சிறுநீரகங்களும் பாதிப்படையலாம். இதனை தடுக்க நினைப்பவர்கள் தினமும் கிரேன்பெர்ரி பழங்களை சாப்பிடுவது சிறந்தது. இது சிறுநீர் பாதையில் இருக்கும் தொற்றுகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கும் அத்துடன் பழங்களில் உள்ள சிட்ரின் சத்து சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதை தடுக்கும்