கடந்த சில தினங்களாக நடிகர் அஜித்குமாரின் புகைப்படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்துக் கொண்டு நிறைய பேர் ரஜினியை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய பிரச்சனை உருவாகி கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் ரஜினியை பற்றி தவறாக பேசுபவர்கள் அஜித் ரசிகர்கள் கிடையாதாம்.
அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பிரச்சனையைக் கிளப்ப விஷமிகள் செய்யும் அபத்தமான வேலைதான் இது. இடையில் சூர்யாவை பற்றியும் தப்பு தப்பாக பேசி அவருடைய ரசிகர்கள் பக்கமும் கொளுத்தி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அஜித் அமைதியாக இருக்கும்போது, அவரை தேடி தேடி இப்படி சில்மிஷ வேலைகள் செய்து இன்னும் அவருக்கு நல்ல பெயர் தான் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பது இந்த விஷமிகளுக்கு தெரிவது இல்லை.