இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டிடம் 50 அடுக்குமாடி குடியிருப்பாகவும் இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.