தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது , அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் தனது அணியை இறுதி சுற்றுக்கு தகுதி பெற வைப்பதே தனது இலக்கு எனவும் தனது கிரிக்கெட் பிரியாவிடை மிக விரைவில் நடைபெறும் எனவும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.