செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்காளான் கறி சாப்பிட்ட மூவர் உயிரிழப்பு!

காளான் கறி சாப்பிட்ட மூவர் உயிரிழப்பு!

Published on

spot_img
spot_img

காளான் கறி சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம், விக்டோரியா மாநில லியோங்காதா நகரில் மதிய உணவு உண்ட பின்னர் மூவர் உயிரிழந்தனர். அத்துடன் அந்த உணவு அருந்திய மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அந்த மதிய உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.49 வயதான எரின் பேட்டர்சன், தாம் குற்றமற்றவர் என்று கூறியுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரது வீட்டில் தேடுதல் நடத்துவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மதிய உணவில் கலந்துகொண்ட அனைவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நால்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 70 வயதான தம்பதியரும் 66 வயதான பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் இறந்தனர்.

மேலும் ஒருவர் இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார். இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காளான் வகையைப் பயன்படுத்தி ‘பீஃப் வெலிங்டன் பை’ சமைத்ததாக எரின் பேட்டர்சன் கூறியிருந்தார்.

“நான் நேசித்தவர்களை காயப்படுத்த எனக்கு எந்த காரணமும் இல்லை என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்” என்று எரின் பேட்டர்சன் கூறியதாக தெரிவிகப்படுகின்றது.

Latest articles

வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி…..

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரனுக்கு இடமாற்றம்……

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று...

பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு….

உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட்...

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பம்…..

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

More like this

வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி…..

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரனுக்கு இடமாற்றம்……

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று...

பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு….

உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட்...