காசாவின் மீது அமெரிக்கா வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.ஜோர்தான் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது.சி130 ரக விமானங்கள் 38000 உணவுப்பொதிகளை காசாவிற்குள் பரசூட் மூலம் வீசின என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரான்ஸ் எகிப்து ஜோர்தான் ஆகிய நாடுகள் முன்னர் காசாவின் மீது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன எனினும் அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதல்தடவை.