கட்டார் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் உத்தியோகபூர்வ தலைமை ஊடக மையம் நேற்று (05) முஸரிஃப் டவுன்டவுனில் திறந்து வைக்கப்பட்டது.
இதில் ஊடகவியலாளர்களுக்காக திறந்திருக்கும் தலைமை ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பு அறை மற்றும் இலவச இணைய வசதிகள், ஸ்டுடியோக்கள், தகவல் தொழில்நுட்ப வசதி, புகைப்படக் கலைஞர் சேவைகள் மற்றும் உணவகம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வகையில் இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்கை தமிழ் ஊடகம் சார்பாக ஜே.எம்.பாசித், அஸ்வர் ரிஸ்வி, ஹுபைப் முஸம்மில், மொஹமட் சிராஜ், ராஜயோகன், நிஹாசா நிசார், ஆஷா பிரியா, பாத்திமா ஆஷிகா, வசந்த் குமார், மொஹமட் ஆதில் மற்றும் ஏ.ஜே.எம்.ஜப்ராஸ் ஆகியோர் பணியற்றவுள்ளனர்.
இதில் கட்டார் நாடானது பிரதானமாக ஊடகவியலார்களை கெளரவிக்கும் வகையில் இவர்களுக்கு இப்படியான வாய்ப்பை வழங்கியுள்ளதோடு இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக்கொடுத்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.