கட்டானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இவரிடமிருந்து 800 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர் ப்ளுமென்டல் பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதுமட்டுமன்றி, பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டானை பொலிஸ் நிலையத்தில் இருந்து சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இவர் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இவர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியும் நிறுத்தாமல் சென்றமையினால் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் அதனை நிறுத்தி சேதனையிடப்பட்டுள்ளனர்.