ஐஸ்லாந்தின் தென் பகுதியிலுள்ள ரெக்ஜேன்ஸ் வளைகுடாவில் காணப்படும் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிமலையிலிருந்து வெளியேறும் தீப்பிழம்புகளால் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய அதனை அண்மித்து வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.