செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்எட்டு மணி நேரம் வரை கோவிட்டை தடுக்கும் ஸ்பிரே: ஒமிக்ரோன் வைரசுக்கும் எதிராக செயல்படும் என...

எட்டு மணி நேரம் வரை கோவிட்டை தடுக்கும் ஸ்பிரே: ஒமிக்ரோன் வைரசுக்கும் எதிராக செயல்படும் என கண்டுபிடிப்பு

Published on

spot_img
spot_img

பின்லாந்து அறிவியலாளர்களால் எட்டு மணி நேரம் வரை கோவிட்டைதடுக்கும் திறன் கொண்ட, மூக்கினுள் தெளிக்கும் வகையிலான ஒரு ஸ்பிரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் சிகிச்சைகளைப் போல் இல்லாமல், இந்த ஸ்பிரே ஒமிக்ரோன் வகை கோவிட் வைரசுக்கும் எதிராகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயெதிர்ப்புக் குறைபாடு கொண்டவர்கள் மற்றும் எளிதில் கோவிட் தொற்றும் அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த அரிய கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. பின்லாந்திலுள்ள ஹெல்சின்கி பல்கலை அறிவியலாளர்கள் இந்த ஸ்பிரேயைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

கோவிட் வைரசைப் பொருத்தவரை, அது இனப்பெருக்கம் செய்யும் இடம், அதாவது அது பெருகும் இடம், மூக்குதான். மூக்கில் பெருகி, எண்ணிக்கையில் அதிகரித்து, பின்னர் அது நுரையீரல் வரை பயணித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அந்த உண்மையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்பிரே, மூக்கினுள் செலுத்தப்படுவதால், கோவிட் வைரஸ் மூக்கினுள் இனப்பெருக்கம் செய்வதே தடுக்கப்பட்டு விடுகிறது.

ஆகவே, முதலிலேயே வைரஸ் தடுக்கப்பட்டு விடுவதால், அது நுரையீரல் வரை சென்று மோசமான நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைகிறது. கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், இந்த ஸ்பிரே, முதன்முதலில் வுகானில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ், பீட்டா வகை வைரஸ், டெல்டா வகை வைரஸ் மட்டுமின்றி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வகை மரபணு மாற்ற வைரசுக்கும் எதிராகச் செயல்படுகிறது என்பதுதான்.

குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சையில் இருப்போர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், எச்.ஐ.வி தொற்றியவர்கள் முதலான நோய் எதிர்ப்புச் சக்தியில் குறைபாடு கொண்டவர்களுக்கு இந்த ஸ்பிரே பெரும் வரப்பிரசாதமாக அமைய வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், தடுப்பூசியை எப்படியாவது தடுக்க விரும்புவோர் இந்த ஸ்பிரேயை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. காரணம், இந்த ஸ்பிரே ஒரு தடுப்பு மருந்து அல்ல, தடுப்பூசிக்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதும் அல்ல.

மாறாக, தடுப்பூசியுடன் இணைந்து செயல்படும் ஒரு கூடுதல் பாதுகாப்பு முறைதான் என்கிறார்கள் அதைக் கண்டுபிடித்த அறிவியலாளர்கள். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த ஸ்பிரே தற்போது ஆய்வகத்தில் விலங்குகள் மீது மட்டும்தான் சோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மீது இன்னமும் சோதிக்கப்படவில்லை. ஆக, அது பயன்பாட்டுக்கு வர இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Latest articles

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

More like this

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...