தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயது பிரிவினருக்கான உலக கிண்ண தொடரில் கொழும்பு_13 கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி மாணவனான சண்முகநாதன் சாருஜன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடர்களில் வெளிப்படுத்திய ஆற்றல் செயற்பாடுகள் காரணமாக 19 வயது இலங்கை தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். குறித்த தொடரில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த நம் தமிழ் ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.