ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார், அங்கு உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை அவர் அங்குரார்ப்பணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திட்டத்தில் டைரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைகளும், 25 கிலோமீட்டர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையும், ஒவ்வொன்றும் 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் அடங்கும்.
உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
5000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை மாற்றுவதும், ஒரு வருடத்தில் 290 GW/h மின்சாரம் உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.