இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு மிகவும் பிரமாண்டமான முறையில் இளையோருக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை அகில இலங்கை ரீதியில் நடத்தி கால்பந்தாட்டத்தில் புதிய யுகம் படைக்க இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் உறுதிபூண்டுள்ளது.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத் தலைவர் ஷெய்க் சலமான் பின் இப்ராஹிம் அல் கலிபாவினால் இளையோர் கால்பந்தாட்ட லீக் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
‘இலங்கை கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவோம்’ என்ற உறுதிப்பாட்டுடன் ‘யூத் நைன்டீன்’ (இளையோர் 19) லீக்கை அவர் ஆரம்பித்துவைத்தார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் கால்பந்தாட்ட இல்ல கேட்போர்கூடத்தில் இந்த வைபவம் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது