இவ்வருடம் முதல் இதுவரையான காலப் பகுதியிவல் 9 மலேரியா நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூலசிறி தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தவர்களில் இருந்து அதிக எண்ணிக்கையான மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டில் மலேரியா நோய் பதிவாகியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு 62 மலேரியா நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.