தென்னிந்திய வரலாற்றில் சோழர் காலத்தில் உருவான அருண்மொழிவர்மன் என அழைக்கப்பட்ட இராஜ ராஜசோழன் எனும் மன்னனே இந்த கோவிலை கட்டியதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
புகழ்பெற்ற ஆலயங்கள் பலவும் கட்டப்பட்ட இந்த காலத்தில் தன் கனவில் நிகழ்ந்த நிகழ்வினை கொண்டே இந்த பிரமாண்டமான கோயிலை இராஜ ராஜ சோழன் ஆறு ஆண்டுகளில் கட்டி முடித்தான் என்பது வரலாறு.
ஒரு லட்சத்து முப்பதாயிரம் டண் எடை கொண்ட தனி “கிறனைட்” கற்களால் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை அண்டி 60 மைல் சுற்றளவுக்கு கற்பாறைகளே இல்லை என்பது வியப்பு.
இந்த கோவில் கற்களை கொண்டுவர முப்பதாயிரத்துக்கும் அதிகமான யானைகள் பயன்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 600 சிற்பிகள் மற்றும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் இந்த கோவிலை கட்டினர் எனவும் கூறப்படுகிறது.