அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள மொழி பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 ஆவது முறையாக நடைபெறும் இரண்டாம் மொழி கற்கை நெறி இதுவாகும்.
பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், அரச கரும மொழிகள் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர், வளவாளர் மற்றும் பயிலுனர்கள் மங்கள விளக்கேற்றி வைக்க நிகழ்வு மங்களகரமாக ஆரம்பமாகியிருந்தது. தொடர்ந்து, இந்த கற்க்கை நெறியின் முக்கியத்துவம் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட இணைப்பாளர் மற்றும் வளவாளர் ஆகியோரால் கருத்துரைகள் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து பயிற்சி நெறி ஆரம்பமாகியிருந்தது.
இந்த பயிற்சி நெறியானது 3 மாதங்கள் நடைபெறவுள்ளதோடு 70 வரையான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயிற்சி நொறி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.