குரோதி ஆண்டு – சித்திரை 15 – ஞாயிற்றுக்கிழமை (28.04.2024)
நட்சத்திரம் : மூலம் காலை 3.12 வரை பின்னர் பூராடம் திதி : சதுர்த்தி காலை 7.06 வரை பின்னர் பஞ்சமி
யோகம் : அமிர்த – சித்த யோகம் நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 3.30 – 4.30
ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்
மேஷம் : குடும்ப செலவுகளை குறைக்கவும். முக்கிய காரியங்களுக்கும் அவசரம் காட்ட வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம் : பெற்றோர்கள் நலனில் அக்கறை கொள்ளவும். எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். கடன் பிரச்சனை தலைதூக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுனம் : தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம் : குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடத்தில் சுமூக உறவு ஏற்படும். எதிரிகள் அடிபணிந்து போவர். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்மம் : குடும்பத்திற்கு வேண்டியது கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். நேர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கன்னி : குடும்ப வளர்ச்சிக்கான திட்டங்கள் இருக்கும். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்ய முடியும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும்.
துலாம் : குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
விருச்சிகம் : முக்கிய நபர் ஒருவரை சந்திக்க நேரிடும். பராமரிப்பு செலவுகள் கூடும். பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு : முன் கோபத்தால் உறவினர்களிடம் பகை உண்டாகும். வாக்கு சாதுரியம் ஏற்படும். நண்பர்களிடம் கேட்டது கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும்.
மகரம் : குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். பெண்களால் சில நன்மை உண்டு. பயணங்களால் அலைச்சல் இருக்கும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம் : நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
மீனம் : தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். மனக்குழப்பம் நீங்கும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உத்யோக மாற்றம் ஏற்படும்.