செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுஇந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. இமாலய சாதனையை நோக்கி ரோஹித் சர்மா படை!

இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. இமாலய சாதனையை நோக்கி ரோஹித் சர்மா படை!

Published on

spot_img
spot_img

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் செய்யப்படாத புதிய வரலாற்று சாதனை ஒன்றை இந்தியா நிகழ்த்தும்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கின்றன. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 5 – 0 என கைப்பற்றும் என பலரும் கணித்த நிலையில், இங்கிலாந்து அணி தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

ஆனால், அடுத்த மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற அளவில் கைப்பற்றியது. தற்போது ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியிலும் இந்தியா வென்றால் டெஸ்ட் தொடரில் 4 – 1 என்ற அளவில் இந்தியா பெரிய வெற்றியை பதிவு செய்யும். அது மட்டுமின்றி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இந்திய அணி செய்யாத புதிய சாதனையை பதிவு செய்யும்.

இதுவரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து விட்டு அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா வென்றதில்லை. அந்த வகையில் இந்தியா அந்த அரியசாதனையை நிகழ்த்தும். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த மாதிரியான டெஸ்ட் தொடர் வெற்றி மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது.

1897/98 மற்றும் 1901/02ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோற்று விட்டு, பின் நான்கு போட்டிகளையும் வென்று 4 – 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின் 1911/12இல் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதே போன்ற சாதனையை செய்தது. அதன் பின் கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு அரிய நிகழ்வு நடைபெறவில்லை. 112 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Latest articles

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

More like this

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...