மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம், சந்தகபுரா கிராமத்தைச் சேர்ந்த 34 வயது கர்ப்பிணி பெண். இவரது கணவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், சமரசம் செய்ய கணவர் மீது குற்றம் சாட்டிய பெண்ணிடம் கர்ப்பிணி பெண் பேச சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஒரு பெண், 3 ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.
அந்த பெண் கர்ப்பமாக இருப்பதைக் கூட கவனிக்காமல் மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்ணின் மீடு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, கர்ப்பிணி பெண் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைத்தனர். இதையடுத்து 80 சதவீத தீக்காயங்களுடன் கர்ப்பிணி பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.