நாளை (24) இலங்கை மின்சார ஊழியர் சங்கம் பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பொல்துவ சுற்றுவட்டத்தை சுற்றி பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்தவொரு வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறையில் ஈடுபடுவதை தடை செய்தும் இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.