செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஆசிய கனிஷ்ட சம்பியன்ஷிப் கடைசி நாளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள் .....

ஆசிய கனிஷ்ட சம்பியன்ஷிப் கடைசி நாளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள் …..

Published on

spot_img
spot_img

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷப்பின் கடைசி நாளான சனிக்கிழமை (27) இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் உட்பட 3 பதக்கங்கள் கிடைத்தது.

இந்த 3 பதக்கங்களும் தொடர் ஓட்டப் போட்டிகளிலேயே கிடைத்தது.

ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகள் இரண்டிலும் வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தது.

ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியை 39.81 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.

அப் போட்டியில் ஹொங்கொங் (39.67 செக்.) தங்கப் பதக்கத்தையும் இந்தியா (40.01 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இந்த நேரப் பெறுதியானது 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கான புதிய 20 வயதுக்குட்பட்ட தேசிய சாதனையாகும். நேற்று நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் நிலைநாட்டிய 40.32 செக்கன்கள் என்ற சாதனை இதன் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கடும் போட்டித்தன்மையை ஏற்படுத்திய ஆண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 09.48 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந்தப் போட்டியில் தாய்லாந்து (3:09.33 செக்.) தங்கப் பதக்கத்தையும் இந்தியா (3:09.38 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.

பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஒரு கட்டத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கை கடைசியில் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.

இலங்கை பெண்கள் அணி அப் போட்டியை 3 நிமிடங்கள், 46.20 செக்கன்களில் நிறைவு செய்தது.

இந்தியா (3:41.50) தங்கப் பதக்கத்தையும் கஸக்ஸ்தான் (3:45.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.

இலங்கைக்கு இன்று கிடைத்த 3 பதக்கங்களுடன் மொத்தம் 2 வெள்ளிப் பதக்கங்களும் 3 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.

Latest articles

திருகோணமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…..

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல. 38இல் உள்ள, பெரியகுளம் – விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று...

மூடப்படவுள்ள மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்….

வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி...

மருதங்கேணியில் மூன்று பிள்ளைகளின் தாயார் படுகொலை…..

மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணின் சடலம் அவர்...

குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி……

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற...

More like this

திருகோணமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…..

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல. 38இல் உள்ள, பெரியகுளம் – விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று...

மூடப்படவுள்ள மதுபான மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்….

வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24 ஆம் திகதிகளில் மதுபான மற்றும் இறைச்சி...

மருதங்கேணியில் மூன்று பிள்ளைகளின் தாயார் படுகொலை…..

மருதங்கேணி தாளையடி பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணின் சடலம் அவர்...