அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன் நாடாளுமன்றத்திற்கான தனது பிரியாவிடை உரையில் சீனாவால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவை கட்டாயப்படுத்த அல்லது ஆதாயம்தேட சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஸ்கொட்மொறிசன் தனது நாடாளுமன்ற உரையில் எச்சரித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சீனாவின் இறைமைக்கு ஆபத்தானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா மோதல் இராஜதந்திரத்தை மூலோபாய அடிப்படையில் தவிர்த்துவருவதை அடிப்படையாக வைத்து அந்தநாட்டின் நோக்கங்கள் பற்றி குழப்பம் ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ள ஸ்கொட்மொறிசன் சீனா சுதந்திரத்தை விட அதிகாரத்தை பலத்தை விரும்பும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனா தனதுநோக்கங்கள் என வரும்போது தனது மக்கள் குறித்து அக்கறை கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே எனது அரசாங்கம் சீனாவின் ஆக்கிரமிப்பினை வற்புறுத்தல்களை மிரட்டல்களை எதிர்ப்பதில் உறுதியாகயிருந்தது எனவும் தெரிவித்துள்ள ஸ்கொட்மொறிசன் நாங்கள் அடிபணிவோம் என சீனா நினைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.