அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவசியமான பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
செவ்வாய்கிழமை நான்கு மாநிலங்களிலும் அமெரிக்க பிரதேசமொன்றிலும் வாக்கெடுப்புகள் இடம்பெற்றன வெளிநாடுகளில் வாழும் ஜனநாயக கட்சியினரும் வாக்களித்தனர்.
இதனை தொடர்ந்து 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரண்டுவேட்பாளர்களையே மீண்டும் அமெரிக்க மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இரண்டு கட்சிகளினதும் மாநாட்டில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும்.