Homeஇலங்கைT-56 துப்பாக்கியை திருடியதற்காக விமானப்படை வீரர் கைது!

T-56 துப்பாக்கியை திருடியதற்காக விமானப்படை வீரர் கைது!

Published on

சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் (SLAF) பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்து திருடப்பட்ட T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை 450,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற விமானப்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் நேற்று (01) விமானப்படை அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில், தம்பியகம, ரிதியகம பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தம்புள்ளையைச் சேர்ந்த சந்தேக நபர் முன்னணி விமானப்படை வீரர் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.சந்தேகநபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் கடமையாற்றிய மற்றுமொரு விமானப்படை வீரரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடியுள்ளார்.

இந்த திருட்டுக்கு விமானப்படை வீரருக்கு உதவிய மற்றுமொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சீகிரிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...