Samsung நிறுவனத்தின் பிரபலமான சில Smartphoneகள் சந்திக்கும் தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தெரியவந்துள்ளது.
Android 9, 10,11 மற்றும் சமீபத்தில் வெளியான Android12 இல் இயங்கும் சாதனங்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளன.
அதன்படி Samsung Galaxy S21 Ultra 5G, Android 11 Samsung S10+, Android 10, Samsung Galaxy A10e , ஆகிய Phoneகள் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இதன்மூலம் Samsung Phone எந்தவொரு Third Party செயலிகளுக்கும் கட்டளையிடுவதற்கு அனுமதி வழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு Third Party செயலி பயனர்களின் அனுமதி இல்லாமலேயே Factory Reset , அழைப்புகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு Samsung Smartphone அனுமதி அளிக்கின்றது.
இதன்மூலம் ஒரு ஹேக்கர் செயலி ஒன்றை உருவாக்கியிருந்தால் அவரால் Samsung Smartphone ஐ எளிதாக கட்டுப்படுத்தவும் முடியும். அத்துடன் நமது தகவல்களை Delete செய்யவும் முடியும் என்று கூறப்படுகிறது.